Wednesday, February 11, 2015

அறியாத கதைகள் 3: பாகவதத்தில் இண்டர்ஸ்டெல்லார் (interstellar)

அறியாத கதைகள் முதல் பகுதியில் மகாபாரதத்தில் உள்ள ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருந்தேன். இப்போது பாகவதத்தில் இருந்து, ஒரு சின்ன பகுதியை இங்கே பதிவு செய்ய இருக்கிறேன்.



இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்று. அதில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் ஒரு கதை வந்தது. அது படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது இண்டர்ஸ்டெல்லார் (interstellar) திரைப்படம் தான்.
கிறிஸ்டோபர் நோலன் ஒரு ஜீனியஸ். அவரது படத்தைப் புரிந்துகொள்ளவே தனி மூளை வேண்டும். சரி. அவர் இயக்கிய இண்டர்ஸ்டெல்லார் படத்துக்கும் பாகவதத்துக்கும் என்ன சம்மந்தம்?

கால நீட்டிப்பு தான் இண்டர்ஸ்டெல்லார் படத்தின் கரு. அதாவது, படத்தில் நாயகன் செல்லும் கார்காஞ்சுவா (Gargantua) என்னும் கிரகத்தில் ஒரு மணி நேரம் நீங்கள் கழித்தால் பூமியில் எழு ஆண்டுகள் போய்விடும். ( சிறப்பு சார்பியல் கொள்கையில் ஐன்ஸ்டீன் சொன்னது.. இந்த கால நீட்டிப்பு).

இதே கால நீட்டிப்பை பாகவதத்தில் உள்ள ஒரு கதையிலும் கண்டேன். அந்த கதை இதோ:

ரேவதன் என்னும் அரசன் கடல் உள்ளே துவாரவதீ என்னும் நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள். மூத்தவன் ககுத்மி.

ககுத்மியின் மகள் ரேவதி. பேரழகியாம். அவளுக்கு ஏற்ற மணாளன் இந்த பூவுலகில் இல்லை என்று எண்ணி, நேராக சத்யலோகம் சென்று பிரம்மரிடம் கேட்டுவிட முடிவு செய்தான்.

ககுத்மி போன்ற ஆன்றோர்களால் சத்யலோகம் செல்ல முடியுமாம். (ஆனால் எப்படி போனார் என்று எல்லாம் குறிப்பிடப் படவில்லை) 

தன் மகளுடன் ககுத்மி பிரம்மலோகம் சென்றான். அங்கே இசை-நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டு இருந்ததால் பிரம்ம தேவரை உடனே சந்திக்க முடியவில்லை. கொஞ்ச நேரம் போன பிறகு பிரம்மாவைக் கண்டு வணங்கி அவரிடம் தன கோரிக்கையை வைத்தார் ககுத்மி. 

"பிரம்ம தேவா! என் மகள் ரேவதிக்கு இணையான மணாளன் யார் இந்த பூலோகத்தில் இருக்கிறார்?" 

பிரம்மா சிரித்துக்கொண்டே சொன்னார்..

"ககுத்மி! நீ பூலோகத்தை விட்டு கிமபும்போது இருந்த அனைவரும் காலத்தால் கவரப்பட்டுவிட்டனர். அவர்களது மகன்கள், பேரப்பிள்ளைகள், என் அவர்களது வம்சமே இப்போது இல்லை. 

நீ இங்கே வந்து சில காலம் தான் ஆனது. அனால் பூமியில் 27 சதுர்யுகங்கள் முடிந்து இருக்கும். "

27 சதுர்யுகங்கள் என்றால் 27 x 4 = 108 யுகங்கள். 

கலி யுகம்: 432000 ஆண்டுகள்.
த்வாபர யுகம்: 2 x 432000 ஆண்டுகள்.
திரேதா யுகம்: 3 x 432000 ஆண்டுகள்.
கிருத யுகம்: 4 * 432000 ஆண்டுகள்.

இந்த நான்கும் சேர்ந்தது தான் ஒரு சதுர்யுகம். எனவே ஒரு சதுர்யுகத்தில் 10 x 432000 = 4320000 ஆண்டுகள் இருக்கும்.

108 சதுர்யுகங்கள் என்றால் 108 x 4320000 = 46,65,60,000 ஆண்டுகள்.
அதாவது 46 கோடியே 65 லட்சத்தி 60 ஆயிரம் ஆண்டுகள்.

எனவே ககுத்மி பிரம்மலோகம் வந்தநேரத்தில்  பூமியில் 466560000 ஆண்டுகள் முடிந்துவிட்டது. இப்போது எல்லாம் அங்கே மாறிப்போய் இருக்க வேண்டும்.

பிரம்ம மேலும் சொன்னார், "இப்போது பூமியில் த்வாபர யுகம் நடக்கிறது. அங்கே உள்ள பலராமன், பகவானின் அம்சம். அவரே உன் மகளுக்கு ஏற்ற ஜோடி."

பூமிக்கு திரும்பிய ககுத்மி அங்கே தன வம்சமே இல்லாமல்போனது தெரிய வந்தது. பலராமருக்கு தன மகள் ரேவதியை கல்யாணம் செய்துவிட்டு வனவாசம் சென்றார்.

Monday, February 9, 2015

இரண்டு வலைப் பூக்களை இணைப்பது எப்படி?

பல பதிவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வலைபூக்கள் வைத்து இருப்பார்கள், சிலர், ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அக்கௌன்டிலிருந்து பதிவிட்டு இருப்பார். இப்போது வேறு ஒரு ஐ.டி. பயன்படுத்துவார்கள்.

பழைய வலைப்பூவில் உள்ள பதிவுகளை அதில் உள்ள பின்னூட்டங்களுடன் புதிய வலைப்பூவிற்கு மாற்ற முடியமா?

முடியும். அதற்கு பிளாக்கரில் மிகவும் எளிய வழி இருக்கிறது.

STEP 1:

முதலில், நீங்கள் எந்த ப்ளாகில் இருந்து உங்கள் பதிவுகளை மாற்ற வேண்டுமோ அந்த ப்ளாகிற்கு சென்று login செய்யுங்கள்.

STEP 2:

இப்போது உங்கள் ப்ளாகிற்கு சென்று settingsஐ கிளிக் செய்து அதில் உள்ள Othersஐ கிளிக் செய்யுங்கள்.



STEP 3:

அடுத்து blog toolsஇல் உள்ள Export Blogஐ கிளிக்குங்கள்.



STEP 4:

படத்தில் காட்டியுள்ளது போல ஒரு dialog box தோன்றும். அதில் Download Blog என்னும் பட்டனை கிளிக் செய்யவும். உடனே, உங்கள் ப்ளாகில் உள்ள அனைத்து பதிவுகளும் .xml பார்மேட்டில் ஒரு கோப்பாக உங்கள் கணினியில் பதிவிறக்கம் ஆகிவிடும்.



STEP 5:

இப்போது, அந்த ப்ளாகிலிருந்து  வெளியேறி, உங்களது புது ப்ளாகில் (அல்லது எந்த ப்ளாகில் உங்கள் பழைய பதிவுகளைப் போட வேண்டுமோ அந்த ப்ளாகில்) உள்நுழையவும். மீண்டும் அதே settings > othersக்கு செல்லவும். இப்போது 'import blog' என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.



STEP 6:

உங்கள் கணினியில் பதிவான .xml fileஐத் தேர்வு செய்யவும்.



அவ்வளவு இப்போது உங்கள் ப்ளாகை பார்க்கவும். எல்லா பதிவுகளும், நீங்கள் முன்பு போட்டிருந்த அதே தேதியில் (நீங்கள் அந்த பதிவை 2012 நவம்பரில் போட்டு இருந்தால், இப்போதும் அதே நவம்பர் 2012 என்றே காட்டும்.. கவலை வேண்டாம்.)

இன்னொரு சிறப்பு என்னவென்றால், உங்கள் பதிவிருக்கு கொடுக்கப்பட்ட பின்னூட்டங்களும் அப்படியே இருக்கும். ஆனால் பார்வைகள் 0 என்று தான் இருக்கும். 

எப்படியும் பின்னூட்டங்கள் பதிவுடன் உங்களுக்கு கிடைக்கும்.


Saturday, February 7, 2015

ராகங்களில் அமைந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள்


சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு வலைப்பதிவில் எழுதிக் கொண்டு இருந்தேன். பின்பு அதில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். இப்போது தான் மீண்டும் பதிவிடத் தொடங்கி இருக்கிறேன். இந்த பதிவு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் என் பழைய ப்ளாகில் எழுதியது. ஆயிரத்து நூறு பார்வைகளைக் கடந்த என் ஒரே பதிவு இது தான். அந்த ப்ளாகை டிலீட் செய்து விட்டதால், தற்போது மீண்டும் 'நாரதன்'இல் சில திருத்தங்களுடனும் மாற்றங்களுடனும் புதிய பாடல்களையும் சேர்த்து பதிவிடுகிறேன்.

இந்த பதிவில் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த தமிழ் பாடல்களும், அவை அமைக்கப் பட்ட கர்நாடக ராகங்களையும் பட்டியல் இட்டு உள்ளேன். நான் ரஹ்மானின் பெரிய விசிறி என்பதால் அவரது பாடல்கள் எல்லாமே எனக்கு ஓரளவுக்கு தெரியும். என் பழைய ப்ளாகில் உள்ள பதிவில் விண்ணை தாண்டி வருவாயா பாடல்கள் வரை தான் சேர்த்து இருந்தேன். இந்த பதிவில்  'ரோஜா'வில் ஆரம்பித்து 'லிங்கா'வரை உள்ள பல பாடல்கள் இதில் அடக்கம். 





எண்பாடல்ராகம்



1மெட்டுப் போடு (டுயட்)ஆனந்த பைரவி
2அன்பென்ற மழையிலே (மின்சாரக் கனவு)ஆனந்த பைரவி
3சொல்லாயோ சோலைக்கிளி (அல்லி அர்ஜுனா)மாயாமாளவகௌளை
4நதியே நதியே (ரிதம்)ஆனந்த பைரவி
5கண்ணோடு காண்பதெல்லாம் (ஜீன்ஸ்)ஆபேரி
6உதயா உதயா (உதயா)சாருகேசி
7தாய் சொன்ன தாலாட்டு (தேசம்)சாருகேசி
8ஏதோ ஏதோ ஒன்று (எனக்கு 20 உனக்கு 18)சாருகேசி
9பாய்சை எங்க வைக்காதே (பாய்ஸ்)ஹம்சத்வனி
10காற்றே என் வாசல் வந்தாய் (ரிதம்)தர்பாரி கானடா
11ஒட்டகத்த கட்டிக்கோ (ஜென்டில்மேன்)தர்மவதி
12பாக்காதே பாக்காதே (ஜென்டில்மேன்)மோகனம்
13எது சுகம் சுகம் (வண்டிச்சோலை சின்னராசு)தர்மவதி
14மோனாலிசா (மிஸ்டர் ரோமியோ)காவதி
15நிலா காய்கிறது (ஹமீர் கல்யாணி)ஹமீர் கல்யாணி
16வெள்ளை பூக்கள் (கன்னத்தில் முத்தமிட்டால்)ஹம்சத்வனி
17என் காதலே (டூயட்)ஹரிகாம்போதி
18மார்கழி பூவே (மே மாதம்)ஹிந்தோளம்
19புது வெள்ளை மழை (ரோஜா)கானடா
20தீக்குருவி (கண்களால் கைது செய்)ஹம்சத்வனி
21என்மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்)காபி 
22கப்பலேறிப் போயாச்சு (இந்தியன்)காபி
23காதல் ரோஜாவே (ரோஜா)காபி (முதல் ஆலாப் தேஷ் ராகம்)
24டுயட் சாக்ஸ் இசை (டுயட்)கல்யாண வசந்தம்
25சக்தி கொடு (பாபா)கல்யானோ
26திறக்காதக் காட்டுக்குள்ளேகேதார் + நீலாம்பரி
27என் சுவாசக் காற்றே (என் சுவாசக் காற்றே)கல்யாணி
28என்னவளே (காதலன்)கேதாரம்
29என்னை காணவில்லையே (காதல் தேசம்)கீரவாணி
30அஞ்சலி அஞ்சலி (டூயட்)மாண்டு
31சௌக்கியமா (சங்கமம்)மாண்டு
32போர்க்களம் (தெனாலி)மாண்டு
33தோம் கருவில் இருந்தோம் (ஸ்டார்)மத்யமாவதி
34ஏ முத்து பாப்பா (வண்டிசோலை சின்னராசு)மத்யமாவதி
35கோலம்பஸ் (ஜீன்ஸ்)மத்யமாவதி
36ஒரு பொய்யாவது சொல் (ஜோடி)காபி
37நெஞ்சினிலே (உயிரே)மிஸ்ர பைரவி **
38என்ன சொல்லப் போகிறாய் (கண்டுகொண்டேன் கண்டுபோனேன்)மிஸ்ர கீரவாணி **
39கையில் மிதக்கும் கனவா நீ (ரட்சகன்)ஹமீர் கல்யாணி
40ஹலோ மிஸ்டர் எதிர்கட்சி (இருவர்)நடபைரவி
41சந்திரலேகா (திருடா திருடா)நடபைரவி
42பூம் பூம் (பாய்ஸ்)மோகனம்
43ஒருநாள் ஒருபொழுது (அந்திமந்தாரை)நாடகுறிஞ்சி
44கண்ணாமூச்சி ஏனடா (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)நாடகுறிஞ்சி
45மச்சினியே (ஸ்டார்)பந்துவராளி
46அழகான ராட்சசியே (முதல்வன்)ரீதிகௌளை
47அழகே சுகமா (பார்த்தாலே பரவசம்)சஹானா
48சுட்டும் விழிச்சுடர் தான் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)சாரங்கா + ஹம்சானந்தி
49என்வீட்டு தோட்டத்தில் (ஜென்டில்மேன்)செஞ்சுருட்டி 
50நெஞ்சே நெஞ்சே (ரட்சகன்)சங்கராபரணம்
51என்னுயிர் தோழியே (கண்களால் கைது செய்)பஹுதாரி
52இன்னிசை அளபெடையே (வரலாறு)சுத்த தன்யாசி
53மார்கழி திங்கள் அல்லவா (சங்கமம்)சிந்து பைரவி
54சிநேகிதனே (அலைபாயுதே)சிந்து பைரவி
55எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)சிந்து பைரவி
56தண்ணீரைக் காதலிக்கும் (மிஸ்டர் ரொமியோ)சிவரஞ்சனி
57கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் (திருடா திருடா)சிவரஞ்சனி
58தீண்டாய்  மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே)ஸ்ரீராகம்
59குறுக்கு சிறுத்தவளே (முதல்வன்)வாஸந்தி
60அடி மஞ்ச கிழங்கே (தாஜ் மஹால்)வாஸந்தி
61வராஹ நதிக்கரையோரம் (சங்கமம்)மாண்டு 
62விடுகதையா (முத்து)சக்கரவாகம்
63அன்பே அன்பே (ஜீன்ஸ்)கரஹரப்ரியா
64மன்மத மாசம் (பார்த்தாலே பரவசம்)வாஸந்தி + ஹம்சத்வனி
65தங்கத் தாமரை மகளே (மின்சாரக் கனவு)சிவரஞ்சனி*
66அரபிக் கடலோரம் (பம்பாய்)பூர்ணகாம்போதி
67தீயில் விழுந்த தேனா (வரலாறு)வாஸந்தி 
68காதல் சடுகுடு குடு (அலைபாயுதே)நடபைரவி
69நறுமுகையே (இருவர்)நாட்டை
70நேற்று இல்லாத மாற்றம் (புதிய முகம்)பிலஹரி
71ஓமனப் பெண்ணே (விண்ணைத் தாண்டி வருவாயா) பிலஹரி
72ஆரோமாலே (விண்ணைத் தாண்டி வருவாயா) பாகேஸ்ரீ
73உயிரும் நீயே (பவித்ரா)கமாஸ்
74காதல் அணுக்கள் (எந்திரன்)பிலஹரி
75வாங்க மக்கான் வாங்க (காவியத்தலைவன்)பிலஹரி
76தமிழா தமிழா (ரோஜா)தர்மவதி
77நியூ யார்க் நகரம் (சில்லுனு ஒரு காதல்)நடபைரவி
78குலுவாலிலே (முத்து)யதுகுல காம்போஜி
79மெதுவாகத்தான் (கோச்சடையான்)கல்யாணி
80மணப்பெனின் சத்தியம் (கோச்சடையான்)த்விஜாவந்தி
81மணமகனின் சத்தியம் (கோச்சடையான்)த்விஜாவந்தி
82கொஞ்சும் மைனாக்களே (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)பல்லவி மத்யமாவதி, மற்றவை கரஹரப்ரியா
83ஓ நண்பா (லிங்கா)மாயாமாளவகௌளை
84 சம்பா சம்பா (லவ் பர்ட்ஸ்) மோகனம்
85 ஏ மாண்புறு மங்கையே (குரு) யமன் கல்யாணி
86 வெண்ணிலா வெண்ணிலா (இருவர்) சலநாட்டை
87 வெள்ளி மலரே (ஜோடி) மேக மலஹர் (ஹிந்துஸ்தானி)
88 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) நளினாகாந்தி + கடனகுதுகலம்
89 சொன்னாலும் கேட்பதில்லை (காதல் வைரஸ்) நளினகாந்தி
90 அன்பின் வாசலே (கடல்) சாருகேசி
91 கன்னத்தில் முத்தமிட்டால் (கன்னத்தில் முத்தமிட்டால்) காபி
92 போறாளே பொன்னுதாயி டூயட் (கருத்தம்மா) மோகனம்
93 போறாளே பொன்னுதாயி சோலோ (கருத்தம்மா) சிவரஞ்சனி
94 மின்சாரப் பூவே (படையப்பா) வசந்தா
95 வாடி சாத்துக்குடி (புதிய மன்னர்கள்) குந்தலவராளி

A.R.Rahman Tamil Songs In Carnatic Ragas


I had already posted this article in my previous blog. It counted over 1100 views. But i have decided to close my old blog. So, I'm reposting in this blog for you all with some additions and corrections.





S.No Song Raaga



1 Mettu podu (Duet) Aanandha Bairavi
2 Anbendra Mazhaiyile (Minsara Kanavu) Aanandha Bairavi
3 Sollayo Solaikili (Alli Arjuna) Maayamalavagowlai
4 Nathiye (Rhythm) Aanandha Bairavi
5 Kannodu Kaanbadhellam (Jeans) Abheri
6 Udhaya Udhaya (Udhaya) Charukesi
7 Thaai sona Thaalattu (Desam / Swades) Charukesi
8 Etho Etho Ondru (Enakku 20 Unakku 18) Charukesi
9 Dating / Boys-ai yenga vaikkadhe (Boys) Hamsadwani
10 Kaatre En Vasal Vandhai (Rhythm) Darbaari Kanada
11 Otagatha Katiko (Gentleman) Dharmavathi
12 Paakkadhe Paakkadhe (Gentleman) Mohanam
13 Edhu Sugam Sugam (vandicholai chinnarasu) Dharmavathi
14 Monalisa (Mr.Romeo) Gavathi
15 Nila Kaaigiradhu (Indhra) Hameer Kalyani
16 Vellai Pookkal (Kannathil muthamittal) Hamsadhwani
17 En Kadhale (due) Hari Kambodhi
18 Maargazhi Poove (May Maatham) Hindolam
19 Pudhu Vellai Mazhai (Roja) Kaanada
20 Theekkuruvi (Kangalal Kaidhu Sei) Hamsadwani
21 En Mel Vizhundha Mazhai Thuli (May Maatham) Kaapi
22 Kappal Yeri Poyaachu (Indian) Kaapi
23 Kadhal Rojave (Roja) Kaapi (Allap is in Desh Raaga)
24 Duet Sax piece (Duet) Kalyana Vasantham
25 Shakthi Kodu (Baba) Kalyani
26 Thirakkadha Kaattukulle (En Swasa kaatre) Kedar + Neelambari
27 En Swasa Kaatre (En Swasa Kaatre) Kalyani (not a pure Kalyani though)
28 Ennavale (Kaadhalan) Kedharam
29 Ennai Kaanavillaye (Kaadhal Desam) Keeravani
30 Anjali Anjali (Duet) Maand
31 Sowkiyama (Sangamam) Maand
32 Porkalam (Tenali) Maand
33 Thom Karuvil Irundhom (star) Madhyamavathi
34 Ye Muthu Paapa (Vandicholai Chinnaraasu) Madhyamavathi
35 Columbus (Jeans) Madhyamavathi
36 Oru poyyavadhu Sol (Jodi) Kaapi
37 Nenjinile Nenjinile (Uiyre/Dil Se) Misra Bhairavi **
38 Enna solla Pogiraai (Kandukonden Kandukonden) Misra Kiravani **
39 Kaiyil Midhakkum Kanava Nee (Ratchagan) Hameer Kalyani
40 Hello Mister Thenkatchi (Iruvar) Bhairavi
41 Chandra Lekha (Thiruda Thiruda) Bhairavi
42 Boom Boom (Boys) Mohanam
43 Orunaal Orupozhudhu (Anthimandharai) Natakurinji
44 Kannamoochi (Kandukonden Kandukonden) Natakurinji
45 Machiniye (Star) Panthuvarali
46 Azhagana Ratchasiye (Mudhalvan) Reethigowlai
47 Azhage Sugama (Paarthaale Paravasam) Sahana
48 Suttum Vizhi (Kandukonden Kandukonden) Saranga and Hamsanandhi
49 En Veetu Thotathil (Gentleman) Senchurutti
50 Nenje Nenje (Ratchagan) Shankarabaranam
51 Ennuyir thozhiye (Kangalal kaidhu Sei) Bahudari
52 Innisai Alabedaye (Varalaru) Shuddha Dhanyasi
53 Maargazhi Thingal (Sangamam) Sindhu Bhairavi
54 Snehithane (Alai Payuthe) Sindhu Bhairavi
55 Enge Enadhu Kavithai (Kandukonden Kandukonden) Sindhu Bhairavi
56 Thaneerai Kathalikum (Mr.Romeo) Sivaranjani
57 Kannum Kannum Kollai (Thiruda Thiruda) Sivaranjani
58 Theendaai (En Swasa kaatre) Sri Raagam
59 Kurukku Siruthavale (Mudhalvan) Vaasanthi
60 Adi Manja Kizhange (Taj Mahal) Vaasanthi
61 Varaga Nathi karaai (Sangamam) Yaman kalyani
62 Vidukadhaya (Muthu) Chakkaravakam
63 Anbe Anbe (Jeans) Kharaharapriya
64 Manmadha Maasam (Paarthale Paravasam) Vaasanthi + Hamsadwani
65 Thanga Thaamarai Magale (Minsara Kanavu) Sivaranjani *
66 Arabi Kadaloram (Bombay) Poornakambodhi
67 Theeyil Vizhundha Thena (Varalaru The GodFather) Vaasanthi
68 Kadhal Sadugudu (Alaipayuthe) Natabhairavi
69 Narumugaiye (Iruvar) Naattai
70 Netru Illadha Matram (Pudhiya Mugam) Bilahari
71 Omana Penne (VTV) Bilahari
72 Aromale (VTV) Bhaageshri
73 Uyirum Neeye (Pavithra) Kamaas
74 Kadhal Anukkal (Endhiran) Bilahari
75 Vaanga Makkan Vaanga (Kaaviya thalaivan) Bilahari
76 Thamizha Thamizha (Roja) Dharmavathi
77 New York Nagaram (Sillunu Oru Kaadhal) Natabhairavi
78 kuluvalilae (muthu) Yadhukula Khaambodhi
79 Medhuvaagathaan (Kochadaiyaan) Kalyani
80 Manappennin Sathiyam (Kochadaiyaan) Dwijavanthi
81 Manamaganin Sathiyam (Kochadaiyaan) Dwijavanthi
82 Konjum Mainaakkale (Kandukonden Kandukonden) Madhyamavathi (Pallavi), Rest Kharaharapriya
83 Oh Nanba (Lingaa) Mayamalavagowlai
84 Samba Samba (Love Birds) Mohanam
85 Ye Maanburu Mangaiye (Guru) Yaman Kalyani
86 Vennila Vennila(Iruvar) Chalanattai
87 Velli Malare (Jodi) Megh Malahar
88 Kandukonden Kandukonden (Kandukonden Kandukonden) Nalinakanthi + Katanakuthukalam
89 Sonnalum Ketpadhillai (Kadhal Virus) Nalinakanthi
90 Anbin Vaasale (Kadal) Charukesi
91 Kannathil Muthamittal (Kannathil Muthamittal) Kaapi
92 Porale Ponnuthayee Duet Version (Karuthamma) Mohanam
93 Porale Ponnuthayee Solo Version (Karuthamma) Sivaranjani
94 Minsara Poove (Padayappa) Vasantha
95 Vaadi Sathukudi (Puthiya Mannargal) Kunthalavarali

Wednesday, February 4, 2015

அறியாத கதைகள் 2: என் ஆசிரியரை எப்படி தண்டிப்பேன்?


இந்த கதையை என் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாட புத்தகத்தில் படித்தது. நல்ல கதைகளை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு படித்திருந்தாலும் கேட்டு இருந்தாலும் மறக்காது. அப்படிப்பட்ட நல்ல கதை ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.



பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் நாட்டில் மார்ஷல் ஆர்ட்ஸ் (தற்காப்புக் கலை) கற்றுக் கொடுக்கும் பள்ளியில் ஒரு மாணவர் இருந்தார். அவருக்கு இருபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கும். 

நல்ல மாணவர் தான். இயல்பில் நல்ல குணம் கொண்டவர் தான். இருந்தும் ஒரு நாள் அவர் ஏதோ தவறு செய்துவிட்டார் போல. அவரது குரு அவருக்கு தண்டனை கொடுத்து விட்டார். மறுநாள் கோபத்தில் அந்த மாணவர் தன் குருவைத் தாக்க அவர் ஒரு பாறையின் மீது விழுந்து தலையில் காயப்பட்டு இறந்து போனார்.

அந்த மாணவனை, அந்த குருவின் மகனும், மற்ற சிஷ்யர்களும் துரத்திக்கொண்டு வந்தனர். மாணவன் பயந்து ஓடினான். எப்படியோ அவர்களுக்கு தண்ணி காட்டிவிட்டு ஒரு மலையில் ஒளிந்துகொண்டான்.

அந்த மாணவன், தான் செய்த தவறை உணர்ந்தான். குருவைக் கொன்று எத்தகைய பாவத்தை செய்துவிட்டோம் என்று எண்ணி வருந்தினான். பேசாமல், மீண்டும் தன் பள்ளிக்கே சென்று, அங்கு உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ளலாமா என்று எண்ணினான். அனால் மீண்டும் அங்கு சென்றால் தனக்கு சங்கு தான் என்பதால் அவரால் எந்த முடிவும் எடுக்க இயலவில்லை.

இருந்தாலும் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்து ஆக வேண்டும் என்று எண்ணினான். அவனால் என்னதான் செய்ய முடியும் என்று நினைத்தான். அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது.

அவன் ஒளிந்து கொண்டு இருந்த மலை இரண்டு கிராமங்களைப் பிரித்தது. அந்த மலையில் பாதை எதுவும் இல்லை. நல்ல பாதை எதுவும் இல்லாததால், மழைக் காலங்களில் பலர் பாறைகளிலிருந்து வழுக்கி விழுந்து இறந்து போவது சகஜமாக இருந்தது. அதனால், அந்த மலையை சுற்றிக்கொண்டே எல்லோரும் சென்று கொண்டு இருந்தனர்.

அந்த மாணவன், தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, அந்த மலையைக் கொடைந்து நல்ல பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்தான். அந்த மலையில் கிடைத்த கிழங்குகளையே உண்டு, அங்கு கிடைத்த பொருட்களை வைத்தே பாதை ஒன்றை உருவாக்கத் தொடங்கினான்.

தனி ஆளாக கிட்டத்தட்ட பாதி வேலையை முடித்து விட்டன். ஒரு நாள் அந்த மாணவன் தன் பணியைத் தொடங்கச் செல்லும்போது அவன் எதிரில் கத்தியுடன் ஒருவன் நின்றான். உற்று பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் தான் கொன்ற ஆசிரியரின் மகன் என்று. அவன் பழி வாங்க வந்திருப்பதை புரிந்து கொண்டான்.

ஆனால் அவன் பயந்து ஓடவில்லை. தன குருவின் மகனிடம், தான் செய்த செயலுக்குப் பிராயச்சித்தமாக இப்போது இந்த மலையில் பாதையை அமைத்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பாதையை முடிக்க எப்படியும் ஆறு மாதங்கள் ஆகும். எனவே அதுவரை, காத்திருந்து அதற்குப்பின் தன்னை, பழி தீர்த்துக் கொள்ளலாம் என்று வேண்டிக் கொண்டான்.

குருவின் மகன், மலையைப் பார்த்தன். அந்த மாணவன் சொல்வதில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. பாதிக்கும் மேல் வேலை முடிந்து இருப்பதை பார்த்தன். தன் தந்தையைக் கொன்ற மாணவனிடம் சொன்னான், 'சரி. உனக்கு நான் நான்கு மதங்கள் தான் அவகாசம் தருவேன். நான்கு மாதங்கள் முடிந்தவுடன், உன் தலையை சீவிவிடுவேன். அதற்குள், இந்த பாதை அமைக்கும் வேலையை முடித்து விடு. இங்கிருந்து தப்பிக்கும் எண்ணம் கொல்லாதே. இந்த மலையைவிட்டு வெளியே நீ வந்தால், காவல் படையிடம் சிக்கி கொள்வாய்.'

அந்த மாணவன் ஒத்துக் கொண்டான். ஆறு மாத காலம் மட்டுமே தன்னிடம் உள்ளதை புரிந்துகொண்டு, இன்னும் வேகமாக வேலையை செய்யத் தொடங்கினான். 

முதல் மாதம்:

குருவின் மகன் தினமும் வந்து அவன் அங்கே இருக்கிறானா இல்லை தப்பித்து ஓடி விட்டானா என்று பார்த்தான்.

இரண்டாம் மாதம்:

அவன் வேலையை வேகாம முடிக்க, பட்டணத்தில் இருந்து நல்ல உளி, வாங்கிக் கொடுத்தான்.

மூன்றாம் மாதம்:

குருவின் மகன், அந்த மாணவன், அங்கே தினமும் கடின முயற்சி மேற்கொண்டு வருவதைப் பார்த்து, அவனுக்கு நன்கு சமைத்த உணவை தினமும் கொண்டு சென்றான்.

நான்காம் மாதம்:

கிட்டத்தட்ட வேலை முடிந்து விட்டதை அறிந்து கொண்டான், ஆசிரியரின் மகன். ஆனாலும் எஞ்சியுள்ள வேலையை ஒரு மாதத்தில் முடிக்க முடியுமா என்று அவனுக்கு தெரியவில்லை. குருவின் மகன், தானும் உளி முதலிய தேவையான உபகரணங்களை எடுத்துக்கொண்டு மலைக்கு சென்று தன் தந்தையைக் கொன்றவனுக்கு பாதையை அமைக்க உதவி செய்தான்.

நான்கு மாதங்கள் முடியும்போது, பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றது. மாணவன், தான் குருவின் மாணவன் முன் மண்டியிட்டு, 'நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டேன். இனி தாங்கள் விரும்பியது போலவே எனக்கு மரண தண்டனையை அளிக்கலாம்.' என்று பணிவாக சொன்னான்,

குருவின் மகன் தன கையில் இருந்த வாளை ஓங்கிக்கொண்டே அந்த  மாணவனிடம் சொன்னான்.

"உன்னிடம் தான் நான் கடின உழைப்பு என்றால் என்ன என்று கற்றுக் கொண்டேன். நான் உன்னைக் கொள்ள வந்தபோது நீ பயந்து ஓடாமல், என்னிடம் அவகாசம் கேட்டாய். உன்னிடம் தான் உண்மையான வீரத்தை அறிந்து கொண்டேன். செய்யும் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் பண்பை உன்னிடம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாவற்றிகும் மேலாக, கொடுத்த வாக்கை, இவ்வளவு கஷ்டப்பட்டு நிறைவேற்றும் பண்பையும் உன்னிடம் தான் கற்றுக்கொண்டேன். நீ எனக்கு குரு ஆகிவிட்டாய். நான் என்ன உன்னைப் போல குருவைக் கொள்பவனா?

என் ஆசிரியரை, எவ்வாறு நான் தண்டிப்பேன்?"

Sunday, February 1, 2015

அறியாத கதைகள் 1: மகாபாரதம் - கர்ணனா தர்மனா ?


மகாபாரத்தில் நிறைய கிளைக் கதைகள் உள்ளன. சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. அவற்றுள் இந்த கதையை அதிகம் பேர் அறிந்திருக்க மாட்டார்கள்.

கர்ணனா? தர்மனா?





அர்ஜுனன், ஒரு நாள் கண்ணனைப் பார்த்து கேள்வி ஒன்றைக் கேட்டான்:

"என் அண்ணன் தர்மன், தர்மம் செய்வதையே தலையாய கடமையாகக் கொண்டுள்ளான். கேட்பவர்களுக்கு இல்லை என்று மறுத்ததே இல்லை. ஆனாலும் எல்லோரும் கர்ணனை தான் வள்ளல் என்று புகழ்கின்றனர். என் அண்ணனை அப்படி புகழ்வதில்லை."

( கீதை உபதேசத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது. கீதையில் செய்யும் கடமைக்கு பலனை எதிர்பார்க்க கூடாது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். எனவே கீதை சொன்னதன் பிறகு அண்ணன் செய்யும் தர்மத்திற்கு பலனாக புகழைத் தம்பி எதிர்பார்த்து இருக்கமாட்டார். ) 

கண்ணனோ, "கர்ணன் தான் யுதிஷ்டிரனைவிட சிறந்த கொடையுள்ளம் கொண்டவன்" என்று பதில் சொல்லிவிட்டார்.

"என்ன நீயும் அப்படியே சொல்கிறாய்?" என்று டிஸ்ஸபாயின்ட் ஆனான் பார்த்தன்,

"நிரூப்பித்துக் காட்டவா?" என்று சேலஞ்ச் செய்தார் கிருஷ்ணர். 'ஆடாம ஜெயிச்சோமடா' என்று பாரத யுத்தத்தில் தேர் ஓட்டிக்கொண்டே தர்மத்திற்கு வெற்றி தேடித் தந்தவர் பகவான். ஒரு சின்ன விவாதத்தில், தன் பாயிண்டை நிரூபிக்க மட்டாரா என்ன?


உடனே கிருஷ்ணர், அந்தணராக வேடமிட்டுக்கொண்டார். அர்ஜுனனையும் அந்தணர் போல மாறுவேடம் பூண்டு வர சொல்கிறார் கண்ணன்.

கர்ணனிடம், பாரத யுத்தத்தில், அவன் செய்த தர்மத்தின் பலனை தானம் கேட்க மீண்டும் அந்தணர்வேடம் தரிப்பதற்கு இது முன்னோட்டமோ என்னவோ.
ஏற்கனவே அர்ஜுனன் சுயம்வரத்தில் திரௌபதியை வெல்லும்போது அந்தணர் வேடத்தில் தான் இருந்தான். அதனால், 'பிரீவியஸ் எச்பீரியன்ஸ்' அர்ஜுனனுக்குத் துணை நின்றிருக்கும்.

கண்ணன் தன் மனதில் வருண பகவானை நினைக்க உடனே மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. கண்ணனும் விஜயனும் அந்தணர் உருவில் யுதிஷ்டிரன் (தர்மன்) உள்ள மாளிகைக்குச் சென்றனர்.

அந்தணர்களைக் கண்டதும் தர்மன் அவர்களை சகல மரியாதைகளோடும் வரவேற்கிறார். (ஆசமனம் எல்லாம் செய்து இருப்பார் போல) பெருமிதத்தோடு அர்ஜுனன் கண்ணனைப் பார்த்து ஒரு லுக் விட்டான்.

கண்ணன் தர்மனைப் பார்த்து கேட்கலானான், "தர்மம் அறிந்த பாண்டுவின் புதல்வரே! மழை பெய்வதால், எங்கள் வீட்டில் உள்ள விறகுக் கட்டைகள் எல்லாம் நினைந்து விட்டன. அடுப்பு பற்றவைக்க இயலவில்லை. எனவே தயை செய்து விறகுக் கட்டைகளை கொடுத்து உதவ வேண்டும்." என்று கேட்டு விட்டு பார்த்தனைப் பார்த்து கண்ணன் ஒரு லுக் விட்டார்.

தர்மர் சொன்னார். "இங்கே உள்ள அணைத்து விறகுகளும் அரண்மனை மாந்தருக்குச் சமையல் செய்ய உபயோகம் செய்து ஆகிவிட்டது. புதிதாக மரங்களை வெட்டினால் தான் உண்டு. அனால் மரங்களும் மழையில் தான் நினைந்து இருக்கும். எனவே என்னால் விறகு கொடுக்க இயலாது. வேண்டுமானால் தாங்கள், தங்கள் குடும்பத்தினரோடு வந்து அரண்மனையில் விருந்துண்டு செல்லலாம்."

விறகுகள் இல்லை என்று தர்மர் சொல்வதை புரிந்துகொண்டு இருவரும் அரண்மனையை விட்டு வெளியேறினர்.

"இல்லாததை எல்லாம் கேட்டல் அண்ணன் எப்படி கொடுப்பன்?" என்று தர்மனின் வக்கீல் போலக் கேட்டான், அந்தணர் உருவில் இருந்த பார்த்தன்,

"வா.. அர்ஜுனா, கர்ணனைக் கேட்போம்." என்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

கர்ணனின் மாளிகையை அடைந்தனர் அவ்விரு நண்பர்கள். கர்ணனும் சகலவித மரியாதையோடும் அந்த இரு அந்தணர்களை வரவேற்றான்.

"மன்னா! மழையில் அணைத்து விறகுக் கட்டைகளும் நினைந்து விட்டன. எங்கள் வீட்டு அடுப்பு எரிய விறகுக் கட்டைகள் கொடுத்து உதவ வேண்டும்" என்று அர்ஜுனன் கர்ணனைப் பார்த்துக் கேட்டான்.

"எல்லா மரங்களும் மழையில் நினைந்து விட்டனவே. நான் என்ன செய்ய?" என்று கர்ணன் சொல்லவில்லை.

அங்க தான் ட்விஸ்ட்.

கர்ணன் உடனே தன் வில்லைக் கையில் எடுத்தார். 'என்ன பண்றாரு இவரு?' என்று புரியாமல் பார்த்தான் பார்த்தன்.

அம்பை நானிலேற்றி அந்த அரண்மனையில் உள்ள கதவுகளையும் ஜன்னல்களையும் நோக்கி செலுத்தினார். அனைத்தும் கீழே உடைந்து விழுந்தன,

ஷாக் ஆயிடான் அர்ஜுனன்.


அவற்றை அள்ளிக் கொண்டு வந்து, "இனி உங்கள் வீட்டு அடுப்பு எரியும்." என்றார் அந்த கொடை வள்ளல்.

எல்லாம் புரிந்திருக்கும் விஜயனுக்கு.



Anu aunty & Arjun: how i braved anu aunty and co-founded a million dollar company..

how i braved anu aunty and co-founded a million dollar company..




It took two minutes for me to type the title. Okay, how many of you have heard about 'alma-mater'. Its one of the first e-commerce ventures in India. They provide apparel and memorabilia to alumni of various schools and colleges. Varun Agarwal is a co-founder of 'alma-mater'. Varun narrates how he became an entrepreneur and started alma matter.

        One of my friends had posted in his facebook wall how i braved anu aunty and co-founded a million dollar company.. was an inspiring book and encouraged him to be an entrepreneur. The word 'entrepreneurship' never failed to strike a bolt in my mind. Immediately I got the book from somewhere and started reading.

I think it's important to tell that this is not a review and I have two reasons for it.
1. I am no good in literature to write a review.
2. The author Varun Agarwal has clearly mentioned that he is just a storyteller and not an author. He is not a professional writer. He is an entrepreneur.

So I don't think that there is any point in writing a review on the book. (Then don't ask me what the hell this is. Please continue reading.)

The protagonist of the story, Varun has completed engineering. He belongs to the majority - yeah, he couldn't get placed in campus interview. He doesn't have any ideas of pursuing higher studies like ME or MBA.

Anu aunty character in this story is the portrayed as the representative of the current generation Indian mothers. None of the Indian mothers wan't their sons and daughters to become an entrepreneur. Because, Indian mothers don't believe in taking risks.

Go and tell your mother that you are going to start a new venture. She will find at least one hundred reasons why should not become an entrepreneur. You may say that it's the middle class attitude that prevents them from taking risks. They just want you to be techno-coolies. 

What made our mothers like this? 
Yes, Anu aunties around us made them like that..

Who is Anu Aunty? How to recognize them?
Its so simple.. The following symptoms are enough to identify them.
1. Her son would probably be a topper and his name is probably Arjun.
2. Her son Arjun would have completed BE with an extraordinary CGPA and now probably pursuing MBA in some High Class B-School or M.S. in University of California.
3. She is the first lady to ask your mother, "Whats your son's GPA? Arjun got 9.2".

Recognizing Arjun is even more hilarious and funny.
1. He reminds the teacher about the tests in the class.
2, He is probably the first to submit the assignments and homeworks in the teacher's table.
3. He would cry for missing half a mark.
4. His aim to work in a company with a initial payment in 5 digits.
5. His short haircut and big spectacles is more than enough to find him.

I bet you know at least one anu aunty and one arjun in your circle. Just because the anu auntie's son arjun is the best in academics, Anu aunty gets a star status in your mother's friend circles and unofficially become the 'chief advisor and consultant' in their's children's education and career.

One such Anu aunty is pestering Varun's mom to make Varun join MBA. She also finds a job for Varun in the company where Arjun is working, so that Varun can be a grade lower than Arjun all long the life.

But Varun is neither interested in MBA, nor in working with Arjun as his sub-ordinate all his life. His friend and Varun are starting the 'alma mater'. They use e-commerce which wasn't much popular at that time and used social media for promoting. Varun says that you should be shameless in promoting your product, if you want to become a successful entrepreneur.. Please read the book to know how all it happened.

I would suggest this book, If you aspire to become an entrepreneur in future..