Friday, December 13, 2013

வாழ்த்து




முதல் பதிவை இறைவணக்கத்துடன் ஆரம்பிக்கலாமே என்று எனக்கு பிடித்த (தெரிந்த) இரண்டு இறைவாழ்த்து பாடல்களுடன்  தொடங்குகிறேன்.

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய
உருப்பளிங்கு போல்வார் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பன் இங்கு வராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரை போற்கையும் துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி. 


கம்பர் இயற்றிய சரஸ்வதி அந்தாதியில் உள்ள பாடல் இது. டூயட் (Duet) படத்தில் உள்ள ஆனந்த பைரவி ராகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த  'மெட்டுப் போடு' பாட்டு இந்த வரிகளுடன்தான் தொடங்கும். 

தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
மொழிந்திடுதல்; சிந்திப்பார்க்கே
களி வளர உள்ளத்தில் ஆநந்தக்
கனவு பல காட்டல்; கண்ணீர்த்
துளிவர உள் உருக்குதல் இங்கு இவையெல்லாம்
நீ அருளும் தொழில்கள் அன்றோ?
ஒளிவளருந் தமிழ்வாணி! அடியனேற்கு
இவை அனைத்தும் உதவுவாயே.

இது மகாகவி, பாஞ்சாலி சபதத்தில் உள்ள சூதாட்ட சருக்கத்தில், 'வாணியை வேண்டுதல்' என்னும் தலைப்பின் கீழ் இந்த பாடல் அறுசீர் விருத்தத்தில் இயற்றப்பட்டு உள்ளது.. அவர் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாக்களில் இதுதான் பெஸ்ட் என்று எனக்கு தோன்றியது. 

தொடர்ந்து பதிவுகளை எழுத எண்ணம் கொண்டுள்ளேன். எனக்கு அரைகுறையாக தெரிந்த எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து பல பதிவுகளை எழுதி அதிகப்ரசங்கித்தனம் செய்ய காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment